-
உபாகமம் 30:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அப்போது, நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்து அவருடைய பேச்சைக் கேட்பீர்கள். இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பீர்கள். 9 நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.+ உங்களுக்கு ஏராளமான பிள்ளைகளையும் மந்தைகளையும் விளைச்சலையும் தருவார். யெகோவா உங்கள் முன்னோர்களை ஆசீர்வதிப்பதில் சந்தோஷப்பட்டது போலவே உங்களை ஆசீர்வதிப்பதிலும் சந்தோஷப்படுவார்.+ 10 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு, இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிப்பீர்கள். முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வருவீர்கள்.+
-