-
எரேமியா 48:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 “மோவாப் பெருமைபிடித்து அலைகிறான்.
அவனுடைய கர்வத்தையும், ஆணவத்தையும், அகம்பாவத்தையும், அகங்காரத்தையும்+ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.”
30 “யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனுடைய கோபவெறியைப் பற்றி எனக்குத் தெரியும்.
ஆனால் அவனுடைய பெருமைப் பேச்செல்லாம் வெற்றுப் பேச்சாகிவிடும்.
அவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்.
-
-
எசேக்கியேல் 25:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘“யூதா ஜனங்கள் மற்ற எல்லா ஜனங்களையும் போலத்தான் இருக்கிறார்கள்” என்று மோவாபும்+ சேயீரும்+ சொல்கின்றன. 9 அதனால், மோவாபின் எல்லைகளில் இருக்கிற நகரங்களை எதிரிகள் தாக்கும்படி செய்வேன். தேசத்துக்கு அழகு சேர்க்கும் பெத்-யெசிமோத்தையும், பாகால்-மெயோனையும், கீரியாத்தாயீமையும்கூட+ அவர்கள் தாக்கும்படி செய்வேன்.
-