-
2 ராஜாக்கள் 15:32-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 ரெமலியாவின் மகன் பெக்கா இஸ்ரவேலை ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில், உசியா+ ராஜாவின் மகன் யோதாம்+ யூதாவில் ராஜாவானார். 33 ராஜாவானபோது அவருக்கு 25 வயது. அவர் 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள்.+ 34 யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+
-
-
2 நாளாகமம் 27:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 யோதாம்+ ராஜாவானபோது அவருக்கு 25 வயது. அவர் 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள்.+ 2 யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+ ஆனால், தன்னுடைய அப்பாவைப் போல் யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே அத்துமீறி நுழையவில்லை.+ இருந்தாலும், மக்கள் இன்னமும் மோசமான காரியங்களைத்தான் செய்துகொண்டிருந்தார்கள்.
-