உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 3:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அந்தக் காலத்தில், யோவான்+ ஸ்நானகர்* யூதேயாவின் வனாந்தரத்துக்கு வந்து, 2 “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”+ என்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.+ 3 இவரைப் பற்றித்தான் ஏசாயா தீர்க்கதரிசி+ இப்படிச் சொல்லியிருந்தார்: “‘யெகோவாவுக்கு* வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்’ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வதைக் கேளுங்கள்!”+

  • மத்தேயு 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அவர்கள் திரும்பிப் போன பின்பு, இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் யோவானைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்?+ காற்றில் அசைந்தாடும் நாணலையா?+

  • மத்தேயு 11:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ‘இதோ! நான் என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன், அவர் உனக்கு முன்னால் போய் உன் பாதையைத் தயார்படுத்துவார்!’+ என்று இவரைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது.

  • மாற்கு 1:2-4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில், “(இதோ! என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன், அவர் உன் பாதையைத் தயார்படுத்துவார்.)+ 3 ‘யெகோவாவுக்கு* வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்!” என்று எழுதப்பட்டிருக்கிறது. 4 அதன்படியே யோவான் ஸ்நானகர்,* பாவ மன்னிப்புக்காக மனம் திருந்த வேண்டுமென்றும், அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றும் வனாந்தரத்தில் பிரசங்கித்துவந்தார்.+

  • லூக்கா 1:76
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 76 குழந்தையே, நீ உன்னதமான கடவுளுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; யெகோவாவுக்கு* முன்னே போய் அவருக்காக வழிகளைத் தயார்படுத்துவாய்.+

  • யோவான் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 கடவுளுடைய பிரதிநிதியாக அனுப்பப்பட்ட ஒரு மனிதர் வந்தார்; அவருடைய பெயர் யோவான்.+

  • யோவான் 1:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அதற்கு அவர், “‘யெகோவாவுக்கு* வழியைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வார் என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது என்னைப் பற்றித்தான்”+ என்றார்.

  • யோவான் 3:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ‘நான் கிறிஸ்து அல்ல,+ ஆனால் அவருக்குமுன் அனுப்பப்பட்டவன்’+ என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்