அத்தி மரம்
வசந்த காலத்தில் ஒரு அத்தி மரத்தின் கிளையில் இலைகள் துளிர்த்திருப்பதையும் முதல் காய்கள் காய்த்திருப்பதையும் இந்தப் படத்தில் பார்க்கிறோம். இஸ்ரவேலில், அத்தி மரம் முதலில் பிப்ரவரி மாதத்தில் காய் காய்க்கும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அல்லது மே மாதத்தில் அதில் இலைகள் துளிர்க்கும். கோடைக் காலம் நெருங்கிவிட்டதற்கு அது அடையாளமாக இருந்தது. (மத் 24:32) ஒவ்வொரு வருஷமும் இரண்டு பருவங்களில் அத்தி மரம் கனி தந்தது: முதல் பருவத்தின் அத்திகள் ஜூன் மாதத்தில் அல்லது ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் அறுவடைக்குத் தயாராக இருக்கும். (ஏசா 28:4; எரே 24:2; ஓசி 9:10) இரண்டாம் பருவத்தின் அத்திகள் புதிய கிளைகளில் காய்க்கும்; இவை ஆகஸ்ட் மாதத்திலிருந்து பொதுவாக அறுவடைக்குத் தயாராக இருக்கும். அந்தப் பருவத்தில் அத்திகள்தான் முக்கியமாக அறுவடை செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட வசனம்: