கைகளால் சுற்றப்பட்ட திரிகைக் கல்
பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்ட மாவு அரைக்கும் கற்களில் இது ஒரு வகை. இதுபோன்ற கற்களில் பொதுவாக இரண்டு பெண்கள் மாவு அரைப்பார்கள். (லூ 17:35) அவர்கள் எதிரெதிரே உட்கார்ந்துகொண்டு, ஒரு கையை அந்தக் கல்லின் கைப்பிடிமேல் வைத்து, அதன் மேற்கல்லைச் சுற்றுவார்கள். மறு கையால் ஒரு பெண் கொஞ்சம் கொஞ்சமாகத் தானியத்தை அந்த மேற்கல்லின் ஓட்டைக்குள் போடுவாள், இன்னொரு பெண் பக்கத்திலுள்ள தட்டிலோ துணியிலோ நிரம்பி விழும் மாவை எடுப்பாள். பெண்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, அன்றன்றைக்குத் தேவைப்படும் ரொட்டிக்காக மாவு அரைப்பார்கள்.
சம்பந்தப்பட்ட வசனம்: