மாவு அரைக்கும் கல்
இது திரிகைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. இது தானியங்களை அரைப்பதற்கும் ஒலிவப் பழங்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. சில திரிகைக் கற்கள் சின்னதாக இருந்ததால் கையினால் சுற்றப்பட்டன. ஆனால், மற்ற திரிகைக் கற்கள் மிகப் பெரியவையாக இருந்ததால் ஒரு விலங்கை வைத்துச் சுற்றப்பட்டன. படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பெரிய திரிகைக் கல்லில்தான் ஒருவேளை சிம்சோனை பெலிஸ்தியர்கள் மாவு அரைக்க வைத்திருப்பார்கள். (நியா 16:21) விலங்குகளை வைத்துச் சுற்றப்பட்ட திரிகைக் கற்கள் இஸ்ரவேலில் மட்டுமல்லாமல், ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன.
சம்பந்தப்பட்ட வசனம்: