அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் (ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிற) புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மற்ற மொழிகளில் 192-பக்க புதிய புத்தகங்கள் எவற்றையேனும் வழக்கம்போல் 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஏப்ரல், மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்குச் சந்தாக்கள். மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 70.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கான ஆறுமாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. ஜூன்: உயிர்—அது எப்படி இங்கு வந்தது? படைப்பினாலா பரிணாமத்தினாலா? (ஆங்கிலம்) 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்திய மொழிகளில் 192-பக்க புதிய புத்தகங்கள் எவற்றையேனும் வழக்கமான 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.
◼ குஜராத்தி, நேப்பாளி, பெங்காலி, ஹிந்தி ஆகிய மொழிகளிலுள்ள காவற்கோபுரத்தின் வெளியீட்டு காலம், ஜனவரி 1995-முதல் மாதாந்தர வெளியீடுகளிலிருந்து மாதம் இருமுறை வெளிவருபவையாகியிருப்பதால், இந்த மொழிகளிலுள்ள சந்தாக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்துவிடும். என்றபோதிலும் சந்தாதாரர்கள், அவர்கள் எதிர்பார்க்கிற வெளியீடுகளின் முழு எண்ணிக்கையையும் பெறுவர்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் மார்ச் 1 அல்லது அதற்குப்பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.