நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்
நினைவு ஆசரிப்பு மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. பின்வரும் விஷயங்களுக்கு மூப்பர்கள் கவனம் செலுத்தவேண்டும்:
◼ கூட்டத்திற்கான நேரத்தை திட்டமிடுகையில், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக அடையாளச் சின்னங்கள் பரிமாறப்படாதவாறு நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
◼ ஆசரிப்பு நடைபெறும் சரியான நேரத்தையும் இடத்தையும், பேச்சாளர் உட்பட, அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
◼ பொருத்தமான வகை அப்பத்தையும் திராட்சரசத்தையும் வாங்கி, தயாராக வைத்திருக்க வேண்டும்.—மார்ச் 1, 1985, காவற்கோபுரம், பக்கம் 22-ஐக் காண்க.
◼ பிளேட்டுகள், கிளாஸ்கள், தகுந்த மேஜை, மேஜை விரிப்பு ஆகியவற்றை மன்றத்திற்கு கொண்டுவந்து, முன்னதாகவே அவற்றிற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றத்தை அல்லது கூட்டம் நடைபெறும் வேறு இடத்தை முன்னதாகவே துப்புரவாக சுத்தம்செய்திருக்க வேண்டும்.
◼ அட்டன்டன்ட்களும் பரிமாறுபவர்களும் தெரிவுசெய்யப்பட்டு, சரியான முறைகளும் அவர்களுடைய வேலைகளைப் பற்றி முன்னதாகவே ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
◼ வியாதியாயிருக்கிற அல்லது ஆஜராக முடியாத அபிஷேகம் செய்யப்பட்ட நபர் யாராவது இருந்தால் அவருக்கும் பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசரிப்புக்காக திட்டமிட்டிருக்கும்போது, முகப்பறையில், நுழைவாயிலில், பாதசாரிகளுக்கான வழிகளில், வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தேவையில்லாமல் நெருக்கம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சபைகளிடேயே நல்ல ஒழுங்கமைப்பு இருக்க வேண்டும்.