மீனவர்கள் பயன்படுத்தும் இழுவலை
இயேசுவின் காலத்தில், ஆளிவிதைச் செடியின் நார்களிலிருந்து இழுவலைகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சில பதிவுகளின்படி, ஒரு இழுவலை 300 மீ. (சுமார் 1,000 அடி) நீளத்தில் இருந்திருக்கலாம். அதன் அடிப்பகுதியில் கனமான பொருள்களும், மேல்பகுதியில் மிதவைகளும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இழுவலையைத் தண்ணீருக்குள் போடுவதற்கு மீனவர்கள் ஒரு படகைப் பயன்படுத்தினார்கள். சிலசமயங்களில், வலையின் முனைகளில் இணைக்கப்பட்டிருந்த நீளமான கயிறுகளைக் கரைக்கு எடுத்துவந்தார்கள். அந்த ஒவ்வொரு கயிற்றையும் நிறைய ஆட்கள் ஒன்றுசேர்ந்து மெதுமெதுவாகக் கரைக்கு இழுத்தார்கள். அந்த வலை எல்லாவற்றையும் வாரிக்கொண்டு வந்தது.
நன்றி:
Library of Congress, LC-DIG-matpc-05687
சம்பந்தப்பட்ட வசனங்கள்: