வலை வீசுதல்
கலிலேயா கடலில் மீன்பிடித்தவர்கள் இரண்டு விதமான எறிவலைகளைப் பயன்படுத்தினார்கள். சின்ன துவாரங்கள் உள்ள வலை, சின்ன மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பெரிய துவாரங்கள் உள்ள வலை, பெரிய மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இழுவலைக்கும் எறிவலைக்கும் வித்தியாசம் இருந்தது. ஏனென்றால், இழுவலையைத் தண்ணீரில் போடுவதற்குக் குறைந்தது ஒரு படகாவது தேவைப்பட்டது; அதோடு, ஒருசில மீனவர்களாவது தேவைப்பட்டார்கள். ஆனால், எறிவலையை ஒரே ஒருவரால்கூட வீச முடிந்தது. அவர் படகில் இருந்தபடி அல்லது கரையிலோ கரைக்குப் பக்கத்திலோ நின்றபடி அதை வீச முடிந்தது. எறிவலையின் விட்டம் 5 மீ. (15 அடி) அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. அதன் ஓரத்தைச் சுற்றிலும் கற்களோ ஈயத்தாலான குண்டுகளோ பொருத்தப்பட்டிருந்தன. வலை சரியாக வீசப்பட்டபோது, தண்ணீர்மேல் தட்டையாக விழுந்தது. அதன் கனமான ஓரப்பகுதிகள் முதலில் தண்ணீருக்குள் மூழ்கின. அதன்பின், மொத்த வலையும் கடலுக்கு அடியில் மூழ்க மூழ்க அதில் மீன்கள் சிக்கின. மீனவர் கடலுக்கு அடியில் நீந்திப்போய், அந்த வலையில் சிக்கிய மீன்களை எடுத்துக்கொள்ள முடிந்தது, அல்லது அந்த வலையைக் கவனமாகக் கரைக்கு இழுத்துவர முடிந்தது. வலையைச் சரியாகப் பயன்படுத்த அதிகத் திறமையும் கடினமான முயற்சியும் தேவைப்பட்டது.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: