செருப்புகள்
பைபிள் காலங்களில், செருப்புகள் தட்டையாக இருந்தன. தோல், மரம், அல்லது வேறு நார்ப்பொருள்களால் செய்யப்பட்டிருந்தன. காலோடு சேர்த்துக் கட்டிக்கொள்ள அவற்றுக்குத் தோல் வார்களும் இருந்தன. சில விதமான கொடுக்கல் வாங்கல்களிலும் சொல்லோவியங்களிலும் செருப்புகள் ஏதோ ஒன்றுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு, திருச்சட்டத்தின்படி ஒருவன் தன் சகோதரனின் மனைவி விதவையாகிவிட்ட பிறகு அவளைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தால், அவனுடைய செருப்பை அவள் கழற்றிப்போட வேண்டியிருந்தது; அதன் பிறகு, “செருப்பு கழற்றப்பட்டவன் குடும்பம்” என்ற கெட்ட பெயர் அவனுக்கு வந்தது. (உபா 25:9, 10) சொத்தை அல்லது மீட்டுக்கொள்ளும் உரிமையை இன்னொருவருக்குக் கொடுப்பதற்கு அடையாளமாகவும் ஒருவர் தன்னுடைய செருப்பைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்தார். (ரூ 4:7) இன்னொருவரின் செருப்பு வார்களை அவிழ்ப்பதோ இன்னொருவரின் செருப்புகளைச் சுமந்துகொண்டு போவதோ அடிமைகளால் செய்யப்பட்ட இழிவான வேலையாகக் கருதப்பட்டது. கிறிஸ்துவைவிட தான் தாழ்ந்தவர் என்பதைக் காட்ட யோவான் ஸ்நானகர் இந்த வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: