போரடிக்கும் கருவிகள்
இங்கே காட்டப்பட்டிருக்கிற போரடிக்கும் பலகைகளின் மாதிரிகள் இரண்டும் (1) தலைகீழாகத் திருப்பி வைக்கப்பட்டுள்ளன; பலகையின் அடிப்பக்கத்தில் பொருத்தப்படும் கூர்மையான கற்களைப் படத்தில் நீங்கள் பார்க்கலாம். (ஏசா 41:15) இரண்டாவது படத்தில் (2) காட்டப்பட்டுள்ளபடி, ஒரு விவசாயி களத்துமேட்டில் கதிர்க்கட்டுகளைப் பரப்பி வைத்து, போரடிக்கும் பலகைமேல் நின்றுகொண்டு, காளை போன்ற ஒரு விலங்கைக் கட்டி அதை இழுக்க வைப்பார். அந்த விலங்கின் குளம்புகளும், அந்தப் பலகையின் அடிப்பக்கத்திலுள்ள கூர்மையான கற்களும் கதிர்களைத் துண்டுதுண்டாக்கும். அப்போது தானியம் கதிர்களிலிருந்து பிரியும். பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய கவைக்கம்பை அல்லது தூற்றுவாரியை (3) பயன்படுத்தி, பதரும் தானியமும் கலந்த கலவையைக் காற்றில் அள்ளி வீசுவார். பதர் லேசாக இருப்பதால் அது காற்றில் அடித்துச்செல்லப்படும், ஆனால் தானிய மணிகள் தரையில் விழும். யெகோவாவின் எதிரிகள் எப்படி மிதித்து நொறுக்கப்படுவார்கள் என்பதை விவரிப்பதற்கு, களத்துமேட்டில் போரடிக்கும் உதாரணத்தை பைபிள் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. (எரே 51:33; மீ 4:12, 13) நல்லவர்கள் எப்படிக் கெட்டவர்களிலிருந்து பிரிக்கப்படுவார்கள் என்பதை விவரிப்பதற்கு, போரடிக்கும் உதாரணத்தை யோவான் ஸ்நானகர் பயன்படுத்தினார்.
நன்றி:
Library of Congress, Prints & Photographs Division, LC-M32-1813; Todd Bolen/BiblePlaces.com
சம்பந்தப்பட்ட வசனங்கள்: