ஏரோது அந்திப்பா தயாரித்த காசு
இயேசு ஊழியம் செய்த காலத்தில் தயாரிக்கப்பட்ட கலப்பு வெண்கலக் காசின் இரண்டு பக்கங்களையும்தான் இந்தப் போட்டோக்களில் பார்க்கிறோம். இந்தக் காசைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டது ஏரோது அந்திப்பா. இவர் கால்பங்கு தேசத்தை, அதாவது கலிலேயா மற்றும் பெரேயாவை, ஆட்சி செய்த மாகாண அதிபதியாக இருந்தார். இயேசு எருசலேமுக்குப் போகும் வழியில் ஏரோதுவின் ஆட்சிப்பகுதியாகிய பெரேயாவைக் கடந்துபோனதாகத் தெரிகிறது; அப்போதுதான், இயேசுவைக் கொலை செய்ய ஏரோது திட்டம் போட்டிருந்ததைப் பற்றி பரிசேயர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தச் சமயத்தில், ஏரோதுவை “அந்தக் குள்ளநரி” என்று இயேசு சொன்னார். (லூ 13:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஏரோதுவின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் யூதர்களாக இருந்தார்கள். அதனால், யூதர்களைக் கோபப்படுத்தாத சின்னங்களாகிய பனை ஓலை (1), கிரீடம் (2) போன்றவை அவர் தயாரித்த காசுகளில் பதிக்கப்பட்டிருந்தன.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: