பாடம் 14
கடவுளுடைய நண்பர்கள் கெட்டதை தவிர்க்கிறார்கள்
கெட்ட செயல்களைச் செய்வதற்கு மக்களை சாத்தான் தூண்டுகிறான். யெகோவாவின் நண்பராக இருக்க விரும்புகிறவர் அவர் வெறுப்பதை வெறுக்க வேண்டும். (சங்கீதம் 97:10) கடவுளுடைய நண்பர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
பாலுறவு சம்பந்தமான பாவங்கள். “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:14) திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பாலுறவு கொள்வது தவறு.—1 கொரிந்தியர் 6:18.
குடிவெறி. “குடிவெறியர் . . . கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:10, NW.
கொலை, கருக்கலைப்பு. “கொலை செய்யாதிருப்பாயாக.”—யாத்திராகமம் 20:13.
திருட்டு. “களவு செய்யாதிருப்பாயாக.” —யாத்திராகமம் 20:15.
பொய் சொல்லுதல். ‘பொய் நாவை’ யெகோவா வெறுக்கிறார்.—நீதிமொழிகள் 6:17.
வன்முறை, கட்டுப்படுத்த முடியாத கோபம். “வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் [யெகோவா] வெறுக்கின்றார்.” (சங்கீதம் 11:5, பொ.மொ.) “மாம்சத்தின் கிரியைகள் . . . கோபங்கள்.”—கலாத்தியர் 5:19, 20.
சூதாடுதல். ‘பேராசைக்காரருடன் . . . உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்.’—1 கொரிந்தியர் 5:11, பொ.மொ.
ஜாதி பகை, இனப் பகை. ‘பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.’—மத்தேயு 5:43, 44, பொ.மொ.
கடவுள் சொல்லும் இவை அனைத்தும் நம்முடைய நன்மைக்கானவை. கெட்ட செயல்களை தவிர்ப்பது எப்பொழுதும் சுலபமல்ல. ஆனால் யெகோவாவின் உதவியோடும் அவருடைய சாட்சிகளின் உதவியோடும், கடவுள் வெறுக்கும் செயல்களை நீங்கள் தவிர்க்க முடியும்.—ஏசாயா 48:17; பிலிப்பியர் 4:13; எபிரெயர் 10:24, 25.