பாடம் 13
மாயமந்திரமும் பில்லிசூனியமும் தீங்கானவை
நீங்கள் மாயமந்திர பழக்கத்தில் ஈடுபடுவதை சாத்தான் விரும்புகிறான். தீங்கிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக, முன்னோர்களுக்கு அல்லது ஆவிகளுக்கு பலர் பலி செலுத்துகிறார்கள். அவைகளுக்கு பயந்து அப்படி செய்கிறார்கள். தாயத்துகளையோ அல்லது மந்திரித்த காப்புகளையோ கயிறுகளையோ மோதிரங்களையோ அணிகிறார்கள். மந்திர சக்தி இருப்பதாக சொல்லி கொடுக்கப்படும் “மருந்துகளை” அருந்துகிறார்கள் அல்லது உடல்களில் பூசிக்கொள்கிறார்கள். சில பொருட்களுக்கு பாதுகாக்கும் சக்தி இருக்கிறது என சிலர் நம்புகிறார்கள். ஆகவே அவற்றை வீடுகளில் அல்லது நிலத்தில் புதைத்து வைக்கிறார்கள். வேறுசிலரோ வியாபாரத்தில், பரீட்சையில் அல்லது காதலில் வெற்றி கிடைக்கும் என நம்பி மந்திர சக்தி படைத்த “மருந்தை” பயன்படுத்துகிறார்கள்.
யெகோவாவை நண்பராக வைத்திருப்பதே சாத்தானுக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பு. சாத்தானையும் அவனுடைய பேய்களையும்விட யெகோவா தேவனும் அவருடைய தூதர்களும் மிக அதிக வல்லமை வாய்ந்தவர்கள். (யாக்கோபு 2:19; வெளிப்படுத்துதல் 12:9) தமக்கு உண்மையாக இருக்கும் நண்பர்களுக்காக யெகோவா தம்முடைய பலத்தை காட்ட ஆவலோடு இருக்கிறார்.—2 நாளாகமம் 16:9.
“குறி பார்க்க வேண்டாம்” என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. மாயமந்திரம், பில்லிசூனியம் ஆகியவற்றில் ஈடுபடுகிறவர்களை யெகோவா கண்டனம் செய்கிறார். ஏனென்றால் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் ஒருவரை நேரடியாக பிசாசாகிய சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கின்றன.—லேவியராகமம் [லேவியர்] 19:26, பொ.மொ.