பகுதி 5–முன்னுரை
இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சீனாய் மலைக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே யெகோவா அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து, அவர்களைத் தன்னுடைய விசேஷ மக்களாக ஆக்கினார். அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்தார். சாப்பிடுவதற்கு மன்னா கொடுத்தார், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தார், அவர்களுடைய துணிமணிகள் கிழியாமல் பார்த்துக்கொண்டார். யெகோவா இஸ்ரவேலர்களுக்கு ஏன் திருச்சட்டத்தையும் வழிபாட்டுக் கூடாரத்தையும் குருமார்களையும் கொடுத்தார் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதும், மனத்தாழ்மையாக நடப்பதும், யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதும் ரொம்ப முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.