உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 7/1 பக். 15
  • பைபிள் தரும் பதில்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் தரும் பதில்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • இதே தகவல்
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • மக்களால் ஏன் சமாதானமாக இருக்க முடியவில்லை?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • உண்மையான சமாதானத்தை நாடி அதைப் பின்தொடருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 7/1 பக். 15

பைபிள் தரும் பதில்கள்

உலக சமாதானம் ஏன் வெறும் கனவாகவே இருக்கிறது?

மக்களின் மனப்பான்மையை மாற்ற முடிந்த அரசாங்கத்தால் மட்டுமே உலக சமாதானத்தைக் கொண்டுவர முடியும்

இதற்கு பைபிள் இரண்டு முக்கியக் காரணங்களை அளிக்கிறது. ஒன்று, மனிதர்கள் பல சாதனைகளைப் படைத்தாலும், தங்களைத் தாங்களே வழிநடத்துகிற திறமை அவர்களுக்கு இல்லை. இரண்டாவது, ‘இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய [அதாவது, பிசாசாகிய சாத்தானுடைய] கைக்குள் கிடப்பதால்’ மனிதர்களுடைய முயற்சியெல்லாம் தோல்வியையே தழுவியிருக்கிறது. எனவே, மனிதர்களால் உலகத்தில் சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லை.—எரேமியா 10:23-ஐயும் 1 யோவான் 5:19-ஐயும் வாசியுங்கள்.

மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பதவி வெறி பிடித்தவர்களாக இருப்பதாலும் உலக சமாதானம் வெறும் கனவாகவே இருக்கிறது. சரியானதைச் செய்ய, ஒருவர்மீது ஒருவர் அக்கறை காட்ட எந்த உலக அரசாங்கம் மக்களுக்குக் கற்பிக்கிறதோ அந்த அரசாங்கத்தால் மட்டுமே உலகில் சமாதானத்தைக் கொண்டுவர முடியும்.—ஏசாயா 32:17, 18; 48:18, 22-ஐ வாசியுங்கள்.

இந்த உலகில் சமாதானத்தை யாரால் நிலைநாட்ட முடியும்?

முழு மனிதகுலத்தின்மீது ஆட்சி செய்ய ஒரேவொரு அரசாங்கத்தை நிறுவப்போவதாகச் சர்வசக்தி படைத்த கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த அரசாங்கம் மனித அரசாங்கங்களையெல்லாம் நீக்கிவிடும். (தானியேல் 2:44) கடவுளுடைய மகனும் சமாதானப் பிரபுவுமான இயேசுதான் அந்த அரசாங்கத்தில் ராஜாவாக இருப்பார். உலகிலுள்ள எல்லாத் தீமையையும் அவர் துடைத்தழித்துவிடுவார். சமாதானமாய் நடக்க மக்களுக்குக் கற்பிப்பார்.—ஏசாயா 9:6, 7; 11:4, 9-ஐ வாசியுங்கள்.

இயேசுவின் வழிநடத்துதலில் இப்போதே உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோர் சமாதானமாய் இருக்க பைபிளிலிருந்து மக்களுக்குக் கற்பிக்கிறார்கள். இன்று கனவாக இருக்கும் உலக சமாதானம் சீக்கிரத்தில் நனவாகப்போகிறது.—ஏசாயா 2:3, 4; 54:13-ஐ வாசியுங்கள். (w13-E 06/01)

கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் 3-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்