உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp16 எண் 2 பக். 3-4
  • அது நிஜமாகவே நடந்ததா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அது நிஜமாகவே நடந்ததா?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நடந்தது உண்மையா?
  • இயேசு மறுபடியும் உயிரோடு வந்தாரா?
  • இயேசுவின் உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நன்மைகள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • சுவிசேஷங்கள்—சரித்திரமா கட்டுக்கதையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • உயிர்த்தெழுதல்​—⁠நிச்சயம் நடக்கும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • ‘கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்துவிட்டார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
wp16 எண் 2 பக். 3-4
இயேசுவின் உடலை மரக் கம்பத்தில் இருந்து இறக்குகிறார்கள். அவருடைய சீடர்கள் தூரத்தில் இருந்து அதைப் பார்க்கிறார்கள்

அட்டைப்படக் கட்டுரை | இயேசு ஏன் கஷ்டப்பட்டு இறந்தார்?

அது நிஜமாகவே நடந்ததா?

கி.பி. 33-ஆம் வருடம். நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு தேசத்துரோகி என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கண்மூடித்தனமாக அடிக்கப்பட்டார். கடைசியில், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார். அவர் வலியால் துடிதுடித்து உயிரை விட்டார். ஆனால், கடவுள் அவரை திரும்பவும் உயிருக்கு கொண்டுவந்தார். அவர் இறந்து 40 நாட்களுக்குப் பிறகு பரலோகத்துக்குப் போனார்.

இந்த சம்பவங்களைப் பற்றி பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதெல்லாம் உண்மையிலேயே நடந்ததா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். ஏன்? அந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடக்கவில்லை என்றால், கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கை எல்லாமே வீணாகிப் போய்விடும். அதாவது, இந்தப் பூமி ஒரு அழகிய தோட்டமாக மாறும், அதில் எல்லாரும் சாவே இல்லாமல் வாழ்வார்கள் என்று அவர்கள் நம்புவது வீணாகிப் போய்விடும். (1 கொரிந்தியர் 15:14) ஆனால், இந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடந்திருந்தால், நம் எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சரி, இந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்று முதலில் தெரிந்துகொள்ளலாம்.

நடந்தது உண்மையா?

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி பைபிள் சொல்வது வெறும் கற்பனையோ கட்டுக்கதையோ கிடையாது. பைபிளை எழுதியவர்கள், நடந்ததை அப்படியே எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் இடங்கள் இன்றும் இருக்கிறது. நீங்களும்கூட அதைப் போய் பார்க்க முடியும். அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆட்களும் உண்மையாகவே வாழ்ந்தவர்கள். இதை வரலாற்று எழுத்தாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.—லூக்கா 3:1, 2, 23.

இயேசுவைப் பற்றி அவர் வாழ்ந்த நூற்றாண்டில் இருந்த எழுத்தாளர்களும், அதற்குப் பிறகு வந்த எழுத்தாளர்களும்கூட எழுதி இருக்கிறார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ரோம நாட்டு முறைப்படி இயேசுவுக்கு மரண தண்டனை கிடைத்தது. இயேசு அப்படித்தான் இறந்தார் என்று பைபிளும் சொல்கிறது. நடந்த சம்பவங்களை பைபிள் மறைக்காமல் அப்படியே சொல்கிறது. சொல்லப்போனால், இயேசுவின் சீடர்கள் செய்த தவறுகளையும்கூட மறைக்காமல் சொல்கிறது. (மத்தேயு 26:56; லூக்கா 22:24-26; யோவான் 18:10, 11) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதியவர்கள் உண்மையில் என்ன நடந்ததோ அதை மறைக்காமல் அப்படியே பைபிளில் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இயேசு மறுபடியும் உயிரோடு வந்தாரா?

நிறைய பேர், இயேசு பூமியில் வாழ்ந்தார் என்பதை நம்புகிறார்கள். ஆனால், அவர் இறந்த பிறகு மறுபடியும் உயிரோடு வந்தாரா இல்லையா என்பதில்தான் சிலருக்கு சந்தேகம். அவருடைய சீடர்கள்கூட இயேசு உயிரோடு வந்ததை ஆரம்பத்தில் நம்பவில்லை. (லூக்கா 24:11) ஆனால், இயேசு மறுபடியும் உயிரோடு வந்ததை அவர்களும் மற்ற சீடர்களும் வித்தியாசமான சந்தர்ப்பங்களில் பார்த்தார்கள். ஒரு சமயம், 500-க்கும் அதிகமான பேர் இயேசுவைப் பார்த்தார்கள். இப்படி பார்த்ததால், இயேசு உயிரோடு வந்துவிட்டார் என்று சீடர்கள் நம்பினார்கள்.—1 கொரிந்தியர் 15:6.

இயேசு மறுபடியும் உயிரோடு வந்ததை சீடர்கள் எல்லாரிடமும் தைரியமாக சொன்னார்கள். இயேசுவை கொலை செய்தவர்களிடமும் சொன்னார்கள். அதற்காக கைது செய்யப்படுவார்கள், கொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்தும் அவர்கள் பயப்படவில்லை. (அப்போஸ்தலர் 4:1-3, 10, 19, 20; 5:27-32) இயேசு மறுபடியும் உயிரோடு வந்தது நூற்றுக்கு நூறு உண்மை என்பது சீடர்களுக்கு தெரியும். அதனால்தான், அவர்களால் அந்தளவு தைரியமாக பேச முடிந்தது. அன்றும் சரி இன்றும் சரி, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பதே இயேசு மறுபடியும் உயிரோடு வந்ததுதான்!

அதனால், இயேசு இறந்ததைப் பற்றி... அவர் மறுபடியும் உயிரோடு வந்ததைப் பற்றி... பைபிள் சொல்வதெல்லாம் வெறும் கற்பனையோ கட்டுக்கதையோ கிடையாது. அது எல்லாமே நிஜம்! இதை யாராலும் மறுக்க முடியாது. நீங்களும் இந்த சம்பவங்களை கவனமாக படித்தால், இதெல்லாமே நிஜம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஏன் நடந்தன? இதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் நம்பிக்கை இன்னும் பலப்படும். அடுத்த கட்டுரை இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும். (w16-E No.2)

a சுமார் கி.பி. 55-ல் பிறந்த டசிட்டஸ் என்பவர் இப்படி எழுதினார்: “கிறிஸ்து என்ற பெயரில் இருந்துதான் [கிறிஸ்தவர்கள்] என்ற பெயர் வந்தது. திபேரியு ஆட்சி செய்த காலத்தில், எங்கள் மாகாண அதிகாரியாக பொந்தியு பிலாத்து இருந்தபோது கிறிஸ்துவுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டது.” சுடோனியஸ் (கி.பி. 69-ல் பிறந்தவர்), யூத வரலாற்று ஆசிரியர் ஜொஸிஃபஸ் (கி.பி. 37 அல்லது 38-ல் பிறந்தவர்), பித்தினியாவின் ஆளுநர் இளைய பிளைனி (கி.பி. 61 அல்லது 62-ல் பிறந்தவர்) போன்றவர்களும் இயேசுவைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மற்ற புத்தகங்களில் ஏன் இயேசுவைப் பற்றி போதுமான ஆதாரங்கள் இல்லை?

இயேசுவின் வாழ்க்கையும் அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களும் லட்சக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இருந்தாலும், பைபிள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த மற்ற புத்தகங்களில் ஏன் இயேசுவைப் பற்றி அதிகமாக எழுதி வைக்கவில்லை? அதற்கு ஒரு காரணம், 2000 வருடங்களுக்கு முன்பு அவரைப் பற்றி பைபிளில் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் வாழ்ந்த மற்ற எழுத்தாளர்கள் எழுதின நிறைய புத்தகங்கள் இப்போது நம்மிடம் இல்லை. ஒரு சில புத்தகங்கள் மட்டும்தான் இருக்கிறது. (1 பேதுரு 1:24, 25) இன்னொரு காரணம், மக்களுக்கு இயேசு மேல் நம்பிக்கை வந்துவிடும் என்று நினைத்து, இயேசுவின் எதிரிகள் அவரைப் பற்றி எதையும் எழுதி வைத்திருக்க மாட்டார்கள்.

இயேசு மறுபடியும் உயிரோடு வந்ததைப் பற்றி அவருடைய சீடர்களில் ஒருவரான பேதுரு இப்படி எழுதினார்: “கடவுள் அவரை மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பி, மக்களுக்குக் காட்சி அளிக்கச் செய்தார். ஆனால் எல்லா மக்களுக்கும் அல்ல, தாம் முன்கூட்டியே நியமித்த சாட்சிகளுக்கு, அதாவது . . .  எங்களுக்கு, காட்சி அளிக்கச் செய்தார்.” (அப்போஸ்தலர் 10:40, 41) ஆனால், அது ஏன் எல்லா மக்களுக்கும் சொல்லப்படவில்லை? ஏனென்றால், இயேசு உயிரோடு வந்தது எல்லா மக்களுக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இயேசுவின் எதிரிகள் பொய்களை பரப்பினார்கள், சதி செய்தார்கள் என்று இயேசுவின் சீடரான மத்தேயு சொன்னார்.—மத்தேயு 28:11-15.

அப்படியென்றால் அவர் உயிரோடு வந்ததை ரகசியமாக வைக்க வேண்டும் என்று இயேசு நினைத்தாரா? நிச்சயமாக இல்லை! “உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் அவரையே நீதிபதியாக நியமித்தார்; இந்த விஷயத்தை மக்களிடம் பிரசங்கிக்கவும் முழுமையாகச் சாட்சி கொடுக்கவும் வேண்டுமென இயேசு எங்களுக்குக் கட்டளையிட்டார்” என்று பேதுரு சொன்னார். இயேசுவை உண்மையாக பின்பற்றுகிறவர்கள் அன்று அந்த செய்தியை சொன்னதுபோலவே இன்றும் சொல்கிறார்கள்.—அப்போஸ்தலர் 10:42.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்