தேவராஜ்ய செய்திகள்
◆ ஜப்பானின் செப்டம்பர் மாத பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை 1,38,975. ஒழுங்கான பயனியர்களுடைய எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்த உச்சநிலையைக் காட்டிலும் சுமார் 2,200 அதிகரித்துவிட்டது. இந்தப் புதிய ஊழிய ஆண்டில் ஐந்து புதிய வட்டாரங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. செப்டம்பரில் 99 வட்டாரங்களில் 128 பயனியர் பள்ளிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 3,068 ஒழுங்கான பயனியர்கள் இந்தப் பயிற்சியைப் பெற்றனர்.
◆ பாப்புவா நியு கினியில் செப்டம்பர் மாதம் புதிய உச்சநிலையான 2,272 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்ததோடு 9 சதவிகித அதிகரிப்பை அடைந்தார்கள்.
◆ இலங்கையில் செப்டம்பர் மாதம் புதிய உச்சநிலையாக 1,249 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்திருந்தார்கள்.
◆ உகாண்டா செப்டம்பர் மாதம் 642 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. இரண்டு வட்டார மாநாடுகளில் ஆஜரானவர்களின் எண்ணிக்கை 1,374. முழுக்காட்டப்பட்டவர்கள்: 34.