கேள்விப் பெட்டி
● ஒரு பிரஸ்தாபி மற்றொரு இடத்துக்குச் செல்கையில் ஒரு புதிய சபைக்கு மாற்றுவதில் உதவியாக என்ன செய்யவேண்டும்?
மற்றொரு சபையிலிருந்து ஒரு பிரஸ்தாபி வந்தவுடனேயே, சபை காரியதரிசி பிரஸ்தாபியிடமிருந்து அவருடைய முந்தின சபையின் பெயரையும், அந்தச் சபையின் காரியதரிசியின் பெயரையும் விலாசத்தையும் பெற வேண்டும். அதன் பின்பு, சபையின் பிரஸ்தாபி பதிவு அட்டையும், அறிமுகக் கடிதமும் கேட்டு முந்தின சபையின் காரியதரிசிக்கு அவர் எழுத வேண்டும். இந்த வேண்டுகோளை பெறும் காரியதரிசி தாமதமின்றி பிரதிபலிக்க வேண்டும்.—நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் பக்கங்கள் 104–5-ஐ பாருங்கள்.
மாறிச்செல்ல திட்டமிடும் பிரஸ்தாபி, தான் விட்டுச் செல்லும் சபையின் சரியான பெயரையும் காரியதரிசியின் பெயர் மற்றும் விலாசத்தையும் கொண்டிருக்க நிச்சயப்படுத்திக் கொள்வதன் மூலம் உதவலாம். பின்பு, புதிய சபைக்கு வந்து சேர்ந்தவுடன், அங்குள்ள காரியதரிசி அவர் உடனடியாக செயல்பட அவரிடம் இந்தத் தகவல் கொடுக்கப்படலாம். புதிய சபைக்கு சமர்ப்பிக்கப்படும் வெளி ஊழிய அறிக்கைகள் பதிவு அட்டை பெறும் வரை நிறுத்தி வைக்கப்படலாம். அதற்கு பின்பு பிரஸ்தாபியின் ஊழியம் பதிவு அட்டையில் எழுதப்பட்டு, சபையின் அடுத்த மாதாந்திர அறிக்கையோடு சேர்க்கப்படலாம்.
சில சந்தர்ப்பங்களில் பிரஸ்தாபி தான் செல்லப்போகும் சபையின் காரியதரிசியின் பெயரையும், விலாசத்தையும் ஏற்கெனவே அறிந்திருக்கலாம். அப்படியானால், ஒரு விண்ணப்பத்துக்காக மூப்பர்கள் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. பிரஸ்தாபியின் ஊழிய அட்டையும், அறிமுகக் கடிதமும் பிரஸ்தாபி கூட்டுறவுக் கொள்ளப்போகும் சபையின் காரியதரிசிக்கு தபால் மூலம் உடனடியாக அனுப்பி வைக்கப்படலாம்.