உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஏப்ரல் பக். 3
  • அன்பாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • யோபு சகித்திருந்தார்—நாமும் சகித்திருக்க முடியும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • பைபிள் புத்தக எண் 18—யோபு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • “என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்”
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • யோபுவின் உத்தமத்தன்மை பலனளிக்கப்பட்டது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஏப்ரல் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 16-20

அன்பாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுக்க வேண்டும்

16: 4, 5

  • யோபு நொந்துபோய் இருந்தார். எல்லாவற்றையும் இழந்து தவித்தார். அப்போது, மற்றவர்களிடமிருந்து அவருக்கு உதவியும் உற்சாகமும் தேவைப்பட்டது

  • யோபுவின் மூன்று நண்பர்கள் அவருக்கு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேச வில்லை. அதற்கு பதிலாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசினார்கள்

பில்தாத் பேசியதைக் கேட்டு யோபு ரொம்ப வேதனைப்பட்டார்

19:2, 25

  • கடவுளிடம் உதவி கேட்டு யோபு கெஞ்சினார். மரணம் வந்தால்கூட பரவாயில்லை என்று நினைத்தார்

  • கடவுள் அவரை உயிரோடு எழுப்புவார் என்று யோபு நம்பினார். அதனால்தான், விசுவாசத்தோடு அவரால் சகித்திருக்க முடிந்தது

எலிப்பாஸ் யோபுவிடம் பேசுகிறார், பில்தாத்தும் சோப்பாரும் அதை பார்க்கிறார்கள்

யோபுவின் போலி நண்பர்கள்

எலிப்பாஸ்

எலிப்பாஸ்:

  • இவர் ஏதோமிலிருந்த தேமான் என்ற ஊரை சேர்ந்தவராக இருக்கலாம். எரேமியா 49:7-ல் தேமான், ஞானத்துக்கு பேர் போன இடமாக சொல்லப்பட்டிருக்கிறது. கல்வியறிவு பெற்ற ஏதோமியர்கள் தேமானில் இருந்தார்கள்

  • மூன்று பேரில் இவர் மூத்தவராகவும் அதிக செல்வாக்குள்ளவராகவும் இருந்திருக்கலாம். இவர்தான் முதலில் பேசினார். மூன்று தடவை பேசினார். மற்ற இரண்டு பேரைவிட அதிக நேரம் பேசினார்

எலிப்பாசின் குற்றச்சாட்டுகள்:

  • யோபுவின் உத்தமத்தை கேலி செய்தார். தன்னுடைய ஊழியர்களை கொஞ்சம்கூட கடவுள் நம்புவது இல்லை என்று சொன்னார் (யோபு 4, 5)

  • யோபுவை, கடவுள் பயம் இல்லாத, திமிர்பிடித்த கெட்ட மனிதன் என்று சொன்னார் (யோபு 15)

  • யோபுவை பேராசைப் பிடித்தவர், அநியாயக்காரர் என்று சொன்னார். கடவுளுடைய பார்வையில் யோபு ஒன்றுக்கும் உதவாதவர் என்றும் சொன்னார் (யோபு 22)

பில்தாத்

பில்தாத்:

  • இவர் சூவாகின் வம்சத்தில் வந்தவர். ஐப்பிராத்து நதியின் கரையோரப் பகுதியில் வாழ்ந்திருக்கலாம்

  • இவர் இரண்டாவதாக பேசினார், மூன்று தடவை பேசினார். குறைவாக பேசினாலும் எலிப்பாசை விட ரொம்ப குத்தலாக பேசினார்

பில்தாத்தின் குற்றச்சாட்டுகள்:

  • யோபுவின் மகன்கள் பாவம் செய்ததால்தான் இறந்தார்கள் என்றும் அவர்களுக்கு வந்த முடிவு சரிதான் என்றும் சொன்னார். யோபுவுக்கு கடவுள் பயமே இல்லை என்று சொன்னார் (யோபு 8)

  • கடவுளுக்கு விரோதமாக யோபு பாவம் செய்பவர் என்று சொன்னார் (யோபு 18)

  • கடவுளுக்கு உத்தமத்தோடு நடப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொன்னார் (யோபு 25)

சோப்பார்r

சோப்பார்:

  • இவர் ஒரு நாகமாத்தியன். ஒருவேளை வடமேற்கு அரேபியாவில் வாழ்ந்திருக்கலாம்

  • இவர் மூன்றாவதாக பேசினார். இரண்டு தடவை பேசினாலும் மற்றவர்களைவிட யோபுவின் மீது மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்

சோப்பாரின் குற்றச்சாட்டுகள்:

  • யோபு அர்த்தமில்லாமல் பேசினார் என்று குற்றம்சாட்டினார். மோசமான பழக்கங்களை விட்டுவிடும்படி யோபுவிடம் சொன்னார் (யோபு 11)

  • யோபு ரொம்ப கெட்டவர் என்றும் கெட்ட காரியங்கள் செய்வதில் சந்தோஷப்படுகிறவர் என்றும் சொன்னார் (யோபு 20)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்