கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
வேலை கிடைப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் முதலிடத்தில் வைப்பதற்கு நீங்கள் சிரமப்படலாம். அதோடு, யெகோவாவுக்கு நீங்கள் செய்கிற சேவைக்குத் தடையாக இருக்கிற ஒரு வேலையோ பைபிளுக்கு விரோதமாக இருக்கிற ஒரு வேலையோ கிடைத்தாலும் பரவாயில்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் யெகோவா, “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்கு” தன்னுடைய பலத்தைக் காட்டுவார் என்பதில் சந்தேகமே வேண்டாம்! (2நா 16:9) அவர் நமக்கு உதவுவதையும் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் யாராலும் எவற்றாலும் தடுக்க முடியாது. (ரோ 8:32) அதனால், வேலை சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும்போது அவரை நம்பியிருங்கள். அவருடைய சேவையை முதலிடத்தில் வையுங்கள்.—சங் 16:8.
யெகோவாவுக்காக முழு மூச்சோடு வேலை செய்யுங்கள் என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஜேசன் ஏன் லஞ்சம் வாங்கவில்லை?
கொலோசெயர் 3:23-ல் சொல்லியிருப்பது போல் நாம் எப்படிச் செய்யலாம்?
ஜேசனின் முன்மாதிரியிலிருந்து தாமஸ் என்ன கற்றுக்கொண்டார்?
எதைச் செய்தாலும் யெகோவாவை மனதில் வைத்து செய்யுங்கள்
மத்தேயு 6:22 சொல்வதுபோல் நாம் எப்படிச் செய்யலாம்?