panitan/stock.adobe.com
வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!
பூமியில் இருந்தபோது இயேசு மக்கள்மீது நிறைய அன்பு காட்டினார். முக்கியமாக, ஏழைகளிடமும் கஷ்டத்தில் தவித்தவர்களிடமும் ரொம்பவே பாசமாக நடந்துகொண்டார். (மத்தேயு 9:36) மற்றவர்களுக்காக அவருடைய உயிரையே கொடுத்தார். (மத்தேயு 20:28; யோவான் 15:13) சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு தன் அதிகாரத்தையும் சக்தியையும் பயன்படுத்தி இந்த முழு பூமியிலிருந்தும் வறுமையை அடியோடு ஒழித்துக்கட்டுவார். இந்த விதத்தில், மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை மறுபடியும் நிரூபித்துக் காட்டுவார்.
இயேசு செய்யப்போவதை ஒரு கவிதையாக பைபிள் இப்படிச் சொல்கிறது:
“எளியவர்களுக்காக அவர் வழக்காடட்டும். ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்.”—சங்கீதம் 72:4.
இயேசு இதுவரை செய்திருக்கும் விஷயங்களுக்காகவும் இனிமேல் செய்யப்போகிற விஷயங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? ஒரு வழி, இயேசு பிரசங்கித்த “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” தெரிந்துகொள்வது. (லூக்கா 4:43) “கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.