உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
அறிவிப்பு
புதிய மொழிகளில் கிடைக்கும்: Betsimisaraka (Northern), Betsimisaraka (Southern), Konkomba, Matses, Mi'kmaq
  • இன்று

வெள்ளி, அக்டோபர் 17

தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். —எபே. 5:8.

தொடர்ந்து “ஒளியின் பிள்ளைகளாக” நடப்பதற்குக் கடவுளுடைய சக்தியின் உதவி நமக்குத் தேவை. இந்த ஒழுக்கங்கெட்ட உலகத்தில் சுத்தமாக இருப்பது சுலபம் இல்லைதான். (1 தெ. 4:3-5, 7, 8) இந்த உலகத்தின் யோசனைகளையும் தத்துவங்களையும் எதிர்த்து போராட கடவுளுடைய சக்தி உதவி செய்யும். அதுமட்டுமல்ல, ‘எல்லா விதமான நல்ல குணத்தையும் நீதியையும்’ வளர்த்துக்கொள்ளவும் அது உதவும். (எபே. 5:9) கடவுளுடைய சக்தி வேண்டுமென்றால் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும். யெகோவா, “தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை . . . கொடுப்பார்” என்று இயேசுவும் சொன்னார். (லூக். 11:13) சபையில் யெகோவாவைப் புகழும்போதும் அந்த சக்தி நமக்குக் கிடைக்கும். (எபே. 5:19, 20) கடவுளுடைய சக்தி நம்மேல் செயல்படும்போது, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியும். w24.03 23-24 ¶13-15

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

சனி, அக்டோபர் 18

கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள். தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.—லூக். 11:9.

உங்களுக்கு இன்னும் அதிக பொறுமை தேவையா? ஜெபம் செய்யுங்கள். பொறுமை என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22, 23) அதனால், யெகோவாவின் சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யலாம். அந்தச் சக்தியால் உண்டாகிற இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள உதவி கேட்டும் ஜெபம் செய்யலாம். நம் பொறுமையைச் சோதிக்கும் ஒரு சூழ்நிலை வந்தால், கடவுளுடைய சக்திக்காக நாம் “கேட்டுக்கொண்டே” இருக்க வேண்டும். (லூக். 11:13) ஒரு விஷயத்தை யெகோவா பார்க்கும் விதத்தில் பார்க்க உதவி செய்யும்படியும் அவரிடம் கேட்கலாம். ஒவ்வொரு நாளும் பொறுமையாக இருப்பதற்கு நம் பங்கில் செய்ய வேண்டியதையும் செய்ய வேண்டும். பொறுமைக்காக எந்தளவுக்கு ஜெபம் செய்கிறோமோ, எந்தளவுக்கு அதைக் காட்ட முயற்சி செய்கிறோமோ அந்தளவுக்கு இந்தக் குணம் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும், நம் சுபாவத்தோடும் கலந்துவிடும். பைபிள் உதாரணங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கவும் உதவும். பொறுமையாக இருந்த நிறைய பேருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது. அவர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, எப்படியெல்லாம் பொறுமை காட்டலாம் என்று கற்றுக்கொள்வோம். w23.08 22 ¶10-11

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

ஞாயிறு, அக்டோபர் 19

உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்.—லூக். 5:4.

யெகோவா உதவி செய்வார் என்று பேதுருவுக்கு இயேசு நம்பிக்கை கொடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்து வந்த பிறகு, பேதுருவுக்கும் அவரோடு இருந்த மற்ற அப்போஸ்தலர்களுக்கும் மீன்பிடிப்பதில் இன்னொரு அற்புதத்தை செய்து காட்டினார். (யோவா. 21:4-6) இந்த அற்புதத்தை பார்த்தபோது யெகோவா அவருடைய பொருள் தேவைகளை கவனித்துக்கொள்வார் என்று பேதுருவுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும். ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுப்பவர்களை’ யெகோவா கவனித்துக்கொள்வார் என்று இயேசு சொன்ன வார்த்தைகளும் அப்போது அவருடைய ஞாபகத்துக்கு வந்திருக்கும். (மத். 6:33) அதனால், மீன்பிடிக்கும் தொழிலை விட ஊழிய வேலைக்கு பேதுரு முதலிடம் கொடுத்தார். கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாள் அன்று, அவர் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். அதைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். (அப். 2:14, 37-41) அதற்குப்பின், சமாரியர்களும் மற்ற தேசத்தை சேர்ந்தவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி செய்தார். (அப். 8:14-17; 10:44-48) எல்லா விதமான மக்களையும் அவருடைய சபைக்குள் கொண்டுவருவதற்கு யெகோவா பேதுருவை பெரிய அளவில் பயன்படுத்தினார். w23.09 20 ¶1; 23 ¶11

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்