13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம்,
“உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+
15 நான் உன்னோடு இருப்பேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாப்பேன். உன்னை இந்தத் தேசத்துக்குத் திரும்பி வரப் பண்ணுவேன்.+ நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், உன்னைக் கைவிடவே மாட்டேன்”+ என்று சொன்னார்.
42 என்னுடைய தாத்தா ஆபிரகாமும் அப்பா ஈசாக்கும் பயபக்தியோடு வணங்கிய கடவுள்+ என் பக்கம் இருந்திருக்காவிட்டால், என்னை வெறுங்கையோடுதான் அனுப்பியிருப்பீர்கள். நான் பட்ட வேதனையையும் சிந்திய வேர்வையையும் கடவுள் பார்த்திருக்கிறார். அதனால்தான், நேற்று ராத்திரி உங்களை எச்சரித்திருக்கிறார்”+ என்றார்.