22 ஆனால் அந்த நாளில், என் ஜனங்கள் வாழ்கிற கோசேன் பிரதேசத்தை மட்டும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அங்கு ஈக்களே வராது.+ அப்போது, யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.+
4 ஆனால், யெகோவாவாகிய நான் எகிப்தியர்களின் கால்நடைகளுக்குச் செய்வது போல இஸ்ரவேலர்களின் கால்நடைகளுக்குச் செய்ய மாட்டேன். இஸ்ரவேலர்களின் கால்நடைகள் எதுவுமே செத்துப்போகாது”’”+ என்றார்.
23 மூன்று நாட்களுக்கு யாராலும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் முடியவில்லை, இருந்த இடத்தைவிட்டு நகரவும் முடியவில்லை. ஆனால், இஸ்ரவேலர்கள் குடியிருந்த பகுதிகளில் வெளிச்சம் இருந்தது.+
7 இஸ்ரவேல் ஜனங்களையோ அவர்களுடைய மிருகங்களையோ பார்த்து ஒரு நாய்கூட குரைக்காது. அப்போது, யெகோவா எகிப்தியர்களை எப்படி நடத்துகிறார், இஸ்ரவேலர்களை எப்படி நடத்துகிறார் என்று நீ தெரிந்துகொள்வாய்’”+ என்றார்.