-
எண்ணாகமம் 32:1-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 ரூபன் வம்சத்தாருக்கும்+ காத் வம்சத்தாருக்கும்+ ஆடுமாடுகள் ஏராளமாக இருந்தன. யாசேர் பிரதேசமும்+ கீலேயாத் பிரதேசமும் ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடமாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். 2 அதனால், காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடமும் குருவாகிய எலெயாசாரிடமும் ஜனங்களின் தலைவர்களிடமும் வந்து, 3 “அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன்,+ எலெயாலே, சேபாம், நேபோ,+ பெயோன்+ ஆகிய இடங்களை 4 இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா வீழ்த்தினார்.+ இவை ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடங்கள். உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு ஏராளமான ஆடுமாடுகள் இருக்கின்றன.+ 5 அதனால் நீங்கள் பெரியமனதுபண்ணி, உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு இந்த இடங்களைச் சொத்தாகக் கொடுங்கள். ஆனால், யோர்தானை மட்டும் கடந்துபோகச் சொல்லாதீர்கள்” என்றார்கள்.
-