-
ஆதியாகமம் 12:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+ 2 நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன், உன்னை ஆசீர்வதித்து உன் பெயரைப் பிரபலமாக்குவேன். உன் மூலமாக எல்லாருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்.+ 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களை நான் சபிப்பேன்.+ பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உன் மூலமாக நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்”+ என்று சொன்னார்.
-
-
ஆதியாகமம் 22:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 யெகோவாவின் தூதர் இரண்டாம் தடவை பரலோகத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு,
-
-
ஆதியாகமம் 26:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 இந்தத் தேசத்தில் அன்னியனாகத் தங்கியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் அப்பாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.+ 4 நான் ஆபிரகாமிடம், ‘உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணுவேன்.+ உன் சந்ததிக்கு இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’+ என்று சொன்னேன், அதன்படியே செய்வேன்.
-