-
யோசுவா 8:30-32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு ஏபால் மலையில்+ யோசுவா பலிபீடம் கட்டினார். 31 “இரும்புக் கருவிகளால் வெட்டப்படாத கற்களைக்கொண்டு பலிபீடம் கட்ட வேண்டும்”+ என்று மோசேயின் திருச்சட்ட புத்தகத்தில்+ எழுதப்பட்டபடியே யோசுவா செய்தார். யெகோவாவின் ஊழியராகிய மோசே இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே அவர் செய்தார். அந்தப் பலிபீடத்தின் மேல் யெகோவாவுக்குத் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் ஜனங்கள் செலுத்தினார்கள்.+
32 இஸ்ரவேலர்களின் முன்னால் மோசே எழுதியிருந்த திருச்சட்டத்தை+ யோசுவா அந்தக் கற்கள்மேல் எழுதினார்.+
-