-
2 சாமுவேல் 16:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அதற்கு அகித்தோப்பேல், “அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக உங்கள் அப்பா அவருடைய மறுமனைவிகளை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்,+ இல்லையா? அவர்களோடு உறவுகொள்ளுங்கள்.+ நீங்கள் உங்களுடைய அப்பாவைக் கேவலப்படுத்திய விஷயம் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியவரும்போது, உங்கள் ஆதரவாளர்களுக்கு இன்னும் தைரியம் கிடைக்கும்” என்று சொன்னான்.
-
-
2 சாமுவேல் 20:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய அரண்மனைக்கு வந்துசேர்ந்தார்.+ அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுவிட்டுப்போன 10 மறுமனைவிகளையும்+ வேறொரு வீட்டில் காவலில் வைத்தார். வேளாவேளைக்கு அவர்களுக்கு உணவு கொடுத்துவந்தார். ஆனால், அவர்களோடு உறவுகொள்ளவில்லை.+ அவர்கள் சாகும்வரை வீட்டுக் காவலில்தான் இருந்தார்கள்; கணவர் உயிரோடு இருந்தபோதே விதவைகள் போல் வாழ்ந்துவந்தார்கள்.
-