-
1 ராஜாக்கள் 16:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 உம்ரியின் மகனான ஆகாப் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.+ 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களை+ இவரும் செய்தார். இது போதாதென்று, சீதோனியர்களின்+ ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைக்+ கல்யாணம் செய்தார், பாகாலுக்கு முன்னால் தலைவணங்கி, அதற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+
-
-
2 ராஜாக்கள் 13:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யூதாவின் ராஜா அகசியாவுடைய+ மகன் யோவாஸ்+ ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் 17 வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார். 2 யெகோவா வெறுக்கிற காரியங்களைத் தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமுடைய பாவ வழியைவிட்டு விலகவே இல்லை,+ விடாப்பிடியாக அந்தக் கெட்ட வழியிலேயே நடந்தார்.
-