-
2 ராஜாக்கள் 11:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 பின்பு, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார்.+ அவர்கள் என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார். அதோடு, ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே மற்றொரு ஒப்பந்தத்தைச் செய்தார்.+ 18 அதன் பின்பு, மக்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குப் போய் அங்கிருந்த பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்.+ பாகால் சிலைகளைத் தூள்தூளாக்கினார்கள்.+ பாகாலின் பூசாரியான+ மாத்தானை அந்தப் பலிபீடங்களுக்கு முன்னால் கொன்றுபோட்டார்கள்.
பின்பு குருவாகிய யோய்தா, யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்ய அதிகாரிகளை நியமித்தார்.+
-
-
2 நாளாகமம் 34:31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 தன்னுடைய இடத்தில் நின்றுகொண்டு, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடப்பதாக யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்.+ அதாவது யெகோவாவின் வழியில் நடப்பதாகவும், அவருடைய கட்டளைகளுக்கும் நினைப்பூட்டுதல்களுக்கும் விதிமுறைகளுக்கும் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ கீழ்ப்படிவதாகவும் ஒப்பந்தம் செய்தார்.+
-