-
2 ராஜாக்கள் 22:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஆனால், யெகோவாவிடம் விசாரிக்கச் சொல்லி உங்களை அனுப்பிய யூதா ராஜாவிடம் போய் இதைச் சொல்லுங்கள்: “நீ கேட்ட வார்த்தைகளைப் பற்றி இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: 19 ‘இந்த இடத்துக்கும் இந்தக் குடிமக்களுக்கும் எதிராக நான் சொன்னதைக் கேட்டு நீ மனம் வருந்தினாய்;* இந்தத் தேசம் கோரமாய்க் கிடக்கும், இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று நான் சொன்னதைக் கேட்டு யெகோவாவுக்கு முன்னால் தாழ்மையாக நடந்துகொண்டாய்.+ உன் உடையைக் கிழித்துக்கொண்டு+ என் முன்னால் அழுதாய். அதனால், நானும் உன்னுடைய மன்றாட்டைக் கேட்டேன் என்று யெகோவா சொல்கிறார்.
-
-
லூக்கா 15:22-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஆனால் அவனுடைய அப்பா தன் அடிமைகளிடம், ‘சீக்கிரம்! முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்குப் போட்டுவிடுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் காலில் செருப்பையும் போட்டுவிடுங்கள். 23 கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம். 24 ஏனென்றால், என்னுடைய மகன் செத்துப்போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துவிட்டான்;+ காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்’ என்று சொன்னார். அதனால், அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
-
-
லூக்கா 18:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 தூரத்தில் நின்றுகொண்டிருந்த வரி வசூலிப்பவனோ, வானத்தைப் பார்ப்பதற்குக்கூட துணியாமல், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, இந்தப் பாவிக்குக் கருணை காட்டுங்கள்’+ என்று ஜெபம் செய்தான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்தப் பரிசேயனைவிட இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.+ ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”+
-