-
2 ராஜாக்கள் 17:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 தங்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்,*+ குறி கேட்டார்கள்,+ சகுனம் பார்த்தார்கள், யெகோவாவைப் புண்படுத்துவதற்காக அவர் வெறுக்கிற காரியங்களை வேண்டுமென்றே செய்துவந்தார்கள்.
18 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவா பயங்கர கோபமடைந்தார், அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே நீக்கிவிட்டார்.+ யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை.
-
-
எரேமியா 7:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 ‘யூதா ஜனங்கள் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்திருக்கிறார்கள்’ என்று யெகோவா சொல்கிறார். ‘என்னுடைய பெயர் தாங்கிய ஆலயத்திலே அருவருப்பான சிலைகளை வைத்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ 31 பென்-இன்னோம்*+ பள்ளத்தாக்கில்* இருக்கிற தோப்பேத்தில்* ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் சுட்டெரித்தார்கள்.+ அப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. அந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’+
-