உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதிடம், ‘நீ என் வழியில் நடந்ததுபோல் உன் வாரிசுகளும் எனக்குக் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால், இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று நீங்கள் கொடுத்திருந்த வாக்கை இப்போது நிறைவேற்றுங்கள்.

  • சங்கீதம் 89:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 “நான் தேர்ந்தெடுத்த ஒருவனோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.+

      என் ஊழியன் தாவீதுக்கு இப்படி ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறேன்:+

       4 ‘உன் சந்ததியை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வேன்.+

      உன் சிம்மாசனத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் நிலைநிறுத்துவேன்.’”+ (சேலா)

  • சங்கீதம் 89:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 என் ஊழியன் தாவீதைக் கண்டேன்.+

      என்னுடைய பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.+

  • சங்கீதம் 89:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 அவனுடைய சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்.+

      அவனுடைய சிம்மாசனம் சூரியனைப் போல எப்போதும் என்முன் நிலைத்திருக்கும்.+

  • ஏசாயா 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்

      சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+

      அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+

      அதுமுதல் என்றென்றும்,

      நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,

      அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+

      பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

  • எரேமியா 33:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 “யெகோவா சொல்வது இதுதான்: ‘ராத்திரியும் பகலும் அதனதன் நேரத்தில் வருவதற்காக நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்களை எப்படி மாற்ற முடியாதோ,+ 21 அப்படியே தாவீதின் வாரிசை ராஜாவாக்குவதற்கு+ நான் செய்த ஒப்பந்தத்தையும், என் குருமார்களாகிய லேவியர்களோடு+ நான் செய்த ஒப்பந்தத்தையும் மாற்ற முடியாது.+

  • மத்தேயு 9:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 இயேசு அங்கிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தபோது, கண் தெரியாத இரண்டு பேர்,+ “தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்று கத்திக்கொண்டே அவர் பின்னால் போனார்கள்.

  • லூக்கா 1:69
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 69 பண்டைய காலம்முதல் தன்னுடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலம் சொன்னபடியே,+

  • அப்போஸ்தலர் 2:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததாலும், கடவுள் அவரிடம், ‘உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்’+ என்று ஆணையிட்டுக் கொடுத்ததை அறிந்திருந்ததாலும், 31 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து முன்கூட்டியே தெரிந்து, கிறிஸ்து கல்லறையில்* விட்டுவிடப்பட மாட்டார் என்றும், அவருடைய உடல் அழிந்துபோகாது+ என்றும் சொல்லியிருந்தார்.

  • அப்போஸ்தலர் 13:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பின்பு, அவரை நீக்கிவிட்டு தாவீதை ராஜாவாக நியமித்து,+ ‘ஈசாயின் மகன் தாவீது என் இதயத்துக்குப் பிடித்தமானவனாக இருப்பதைக் கண்டேன்;+ நான் விரும்பிய எல்லா காரியங்களையும் அவன் செய்வான்’ என்று அவரைப் பற்றிச் சாட்சி கொடுத்தார். 23 தான் கொடுத்த வாக்குறுதியின்படியே, தாவீதின் சந்ததியிலிருந்து இயேசுவை இஸ்ரவேலின் மீட்பராக+ வர வைத்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்