-
1 சாமுவேல் 15:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அதற்கு சாமுவேல், “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தகன பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருக்குமா?+ பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பைச்+ செலுத்துவதைவிட அவர் பேச்சைக் கேட்பதுதான் முக்கியம். 23 கீழ்ப்படியாமல் போவது+ பில்லிசூனியத்தில் ஈடுபடும் பாவத்துக்குச்+ சமம். அகங்காரத்தோடு* நடந்துகொள்வது மாயமந்திரம் செய்வதற்கும் சிலைகளை* வணங்குவதற்கும் சமம். யெகோவாவின் கட்டளையை+ நீ ஒதுக்கித்தள்ளிவிட்டாய், அதனால் ராஜாவாக இல்லாதபடி அவர் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்”+ என்று சொன்னார்.
-
-
மீகா 6:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவாரா?
ஆறுகளாய் ஓடும் எண்ணெயை விரும்புவாரா?+
நான் செய்த தவறுக்காக என்னுடைய மூத்த மகனைத் தர வேண்டுமா?
நான் செய்த பாவத்துக்காக என் பிள்ளையைக் கொடுக்க வேண்டுமா?+
8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார்.
யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?*
-