உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 3:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ராஜா சொன்ன தீர்ப்பை இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள். கடவுள் கொடுத்த ஞானத்தால்தான் அவர் நியாயம் வழங்குகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.+ அதனால், ராஜாவைப் பார்த்து பிரமித்துப்போனார்கள்.*+

  • 1 ராஜாக்கள் 4:29-31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+ 30 கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலொமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.+ 31 ஞானத்தில் அவருக்குச் சமமாக யாருமே இருக்கவில்லை. எஸ்ராகியனான ஏத்தான்,+ மாகோலின் மகன்களான ஏமான்,+ கல்கோல்,+ தர்தா ஆகியோரைவிட அவர் ஞானமுள்ளவராக இருந்தார். சுற்றியிருந்த எல்லா தேசங்களுக்கும் அவருடைய பேரும் புகழும் பரவியது.+

  • 2 நாளாகமம் 1:10-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இந்த மக்களை நல்ல முறையில் வழிநடத்த இப்போது எனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுங்கள்.+ இல்லாவிட்டால், இத்தனை ஏராளமான மக்களுக்கு என்னால் எப்படி நீதி வழங்க முடியும்?”+ என்றார்.

      11 அதற்குக் கடவுள், “செல்வத்தையோ பொருளையோ பேர்புகழையோ எதிரிகளின் உயிரையோ நீண்ட ஆயுசையோ நீ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, என்னுடைய மக்களுக்கு* நீதி வழங்க ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய்.+ அதனால், நீ மனதார ஆசைப்பட்டபடியே, 12 ஞானத்தையும் அறிவையும் உனக்குத் தருவேன். அதோடு, உனக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேறெந்த ராஜாவுக்கும் இல்லாத அளவுக்குச் செல்வத்தையும் பொருளையும் பேர்புகழையும் தருவேன்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்