14 சீயோன் மகளே, சந்தோஷமாகப் பாடு!
இஸ்ரவேலே, வெற்றி முழக்கம் செய்!+
எருசலேம் மகளே, இதயம் பொங்க சந்தோஷப்படு!+
15 உனக்கு எதிரான தீர்ப்புகளை யெகோவா ரத்து செய்தார்.+
விரோதிகளை உன்னைவிட்டு விலக்கினார்.+
இஸ்ரவேலின் ராஜாவான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+
ஆபத்தை நினைத்து இனி நீ பயப்பட மாட்டாய்.+