-
எரேமியா 21:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதற்குப் பின்பு, யூதாவின் ராஜாவான சிதேக்கியாவையும் அவனுடைய ஊழியர்களையும் இந்த நகரத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன்.” யெகோவா சொல்வது இதுதான்: “கொள்ளைநோய்க்கும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் தப்பியவர்களை, அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+ பாபிலோன் ராஜா அவர்கள் எல்லாரையும் வாளால் வெட்டிச் சாய்ப்பான். அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டான், பரிதாபப்பட மாட்டான்.”’+
-
-
எசேக்கியேல் 12:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவர்களுடைய தலைவன் மூட்டைமுடிச்சுகளைத் தோளில் வைத்துக்கொண்டு இருட்டில் புறப்பட்டுப் போவான். சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாகத் தன்னுடைய மூட்டைமுடிச்சுகளை எடுத்துக்கொண்டு போவான்.+ தரையைப் பார்க்க முடியாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்’ என்று சொல். 13 நான் அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ நான் அவனை கல்தேயர்களின் தேசமாகிய பாபிலோனுக்கு அனுப்புவேன். ஆனால், அவன் அதைப் பார்க்க முடியாது. அங்கே அவன் செத்துப்போவான்.+
-