உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 21:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதற்குப் பின்பு, யூதாவின் ராஜாவான சிதேக்கியாவையும் அவனுடைய ஊழியர்களையும் இந்த நகரத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன்.” யெகோவா சொல்வது இதுதான்: “கொள்ளைநோய்க்கும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் தப்பியவர்களை, அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+ பாபிலோன் ராஜா அவர்கள் எல்லாரையும் வாளால் வெட்டிச் சாய்ப்பான். அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டான், பரிதாபப்பட மாட்டான்.”’+

  • எரேமியா 24:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவும்,+ அவனுடைய அதிகாரிகளும், எருசலேமின் அழிவில் தப்பித்தவர்களும், அதாவது இந்தத் தேசத்திலும் எகிப்திலும்+ வாழ்கிறவர்களும், கெட்டுப்போன அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள்.

  • எரேமியா 34:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையிலும்+ பின்வாங்கிப் போகிற பாபிலோன் ராஜாவின் படைவீரர்களுடைய கையிலும் நான் சிதேக்கியா ராஜாவையும் அவனுடைய அதிகாரிகளையும் கொடுத்துவிடுவேன்.’+

  • எசேக்கியேல் 12:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவர்களுடைய தலைவன் மூட்டைமுடிச்சுகளைத் தோளில் வைத்துக்கொண்டு இருட்டில் புறப்பட்டுப் போவான். சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாகத் தன்னுடைய மூட்டைமுடிச்சுகளை எடுத்துக்கொண்டு போவான்.+ தரையைப் பார்க்க முடியாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்’ என்று சொல். 13 நான் அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ நான் அவனை கல்தேயர்களின் தேசமாகிய பாபிலோனுக்கு அனுப்புவேன். ஆனால், அவன் அதைப் பார்க்க முடியாது. அங்கே அவன் செத்துப்போவான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்