உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 1:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஏனென்றால், ‘வடக்கு ராஜ்யங்களில் உள்ள எல்லா கோத்திரங்களையும் நான் அழைத்திருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.+

      ‘அவர்கள் வருவார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும்

      எருசலேமின் வாசல்களில் தங்கள் சிம்மாசனத்தை நிறுத்தி வைப்பார்கள்.+

      எருசலேமின் எல்லா மதில்களையும்,

      யூதாவின் எல்லா நகரங்களையும் தாக்குவார்கள்.+

  • எரேமியா 4:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இதை எல்லா தேசங்களுக்கும் சொல்லுங்கள்.

      எருசலேமுக்கு எதிராக அறிவிப்பு செய்யுங்கள்.”

      “தொலைதூரத்திலிருந்து வீரர்கள்* வருகிறார்கள்.

      அவர்கள் யூதா நகரங்களுக்கு எதிராகப் போர் முழக்கம் செய்வார்கள்.

  • எரேமியா 25:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 வடக்கிலிருக்கிற எல்லா ஜனங்களையும்+ என் ஊழியனான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரையும்+ வர வைத்து, இந்தத் தேசத்தையும் இந்த ஜனங்களையும் சுற்றுப்புற தேசங்களில் இருக்கிறவர்களையும் அழித்துவிடுவேன்.”+ யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன். அதைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்வார்கள்.*

  • எசேக்கியேல் 7:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 ஜனங்களிலேயே மிகக் கொடூரமான ஜனங்களை நான் அவர்களுக்கு எதிராக வர வைப்பேன்.+ அந்த ஜனங்கள் அவர்களுடைய வீடுகளைப் பறித்துக்கொள்வார்கள்.+ பலம்படைத்தவர்களின் பெருமைக்கு நான் முடிவுகட்டுவேன். அவர்களுடைய பரிசுத்தமான இடங்கள் தீட்டுப்படுத்தப்படும்.+

  • ஆபகூக் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நான் கல்தேயர்களை வரவழைப்பேன்.+

      அவர்கள் ஈவிரக்கம் இல்லாதவர்கள், கண்மூடித்தனமாகத் தாக்குபவர்கள்.

      பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள்.

      தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்