-
2 ராஜாக்கள் 24:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 இதெல்லாம் யெகோவாவின் கட்டளைப்படிதான் நடந்தது; யூதா மக்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்குவதற்காகத்தான் இப்படிச் செய்தார்.+ ஏனென்றால் மனாசே நிறைய பாவங்கள் செய்திருந்தார்;+ 4 அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருந்தார்;+ அப்பாவிகளின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பியிருந்தார். யெகோவா இதையெல்லாம் மன்னிக்கத் தயாராக இல்லை.+
-
-
எரேமியா 7:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களையும், அப்பா இல்லாத பிள்ளைகளையும்,* விதவைகளையும்+ கொடுமைப்படுத்தாமல் இருந்தால், அப்பாவிகளைக் கொலை செய்யாமல் இருந்தால், மற்ற தெய்வங்களை வணங்கி உங்களுக்கே கெடுதலைத் தேடிக்கொள்ளாமல் இருந்தால்,+ 7 நான் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்திலேயே நீங்கள் என்றென்றும் வாழ்வதற்கு அனுமதிப்பேன்.”’”
-