-
எசேக்கியேல் 1:15-18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான்கு முகங்களுள்ள அந்த ஒவ்வொரு ஜீவனுக்குப் பக்கத்திலும் ஒரு சக்கரம் தரையில் தெரிந்தது.+ 16 அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன. நான்கு சக்கரங்களும் பார்ப்பதற்கு ஒரேபோல் இருந்தன. அவை ஒவ்வொன்றும், ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரத்தை வைத்தது போல இருந்தன.* 17 திரும்பாமலேயே நான்கு திசைகளிலும் போக அவற்றால் முடிந்தது. 18 அந்தச் சக்கரங்களின் உயரத்தைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. அவற்றின் வட்டத்தைச் சுற்றிலும் கண்கள் இருந்தன.+
-