-
வெளிப்படுத்துதல் 14:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பின்பு, வேறொரு தேவதூதர் பலிபீடம் இருக்கிற இடத்திலிருந்து வெளியே வந்தார்; நெருப்பின் மீது அவருக்கு அதிகாரம் இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “திராட்சைப் பழங்கள் பழுத்துவிட்டன, அதனால் உங்களுடைய கூர்மையான அரிவாளால் பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுங்கள்”+ என்று அவர் சத்தமாகச் சொன்னார். 19 அதன்படியே, அந்தத் தேவதூதர் தன்னுடைய அரிவாளை நீட்டி பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுத்து, கடவுளுடைய கோபம் என்ற மாபெரும் ஆலையில்+ அவற்றைப் போட்டார். 20 நகரத்துக்கு வெளியில் இருந்த அந்த ஆலையில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையிலிருந்து இரத்தம் குதிரைகளின் கடிவாளம்வரை பெருகி, சுமார் 296 கிலோமீட்டர்* தூரத்துக்குப் பாய்ந்தோடியது.
-