-
அப்போஸ்தலர் 25:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதற்கு பவுல், “நான் ரோம அரசனுடைய* நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்கிறேன். இங்குதான் என்னை விசாரிக்க வேண்டும். யூதர்களுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. இது உங்களுக்கே நன்றாகத் தெரியவந்திருக்கும். 11 நான் உண்மையிலேயே கெட்டவனாக இருந்து மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால்,+ சாவதற்குக்கூட தயங்க மாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லையென்றால், என்னை இவர்களிடம் ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”+ என்று சொன்னார். 12 அப்போது, பெஸ்து தன்னுடைய ஆலோசகர் குழுவிடம் கலந்துபேசிவிட்டு, “ரோம அரசனிடம்* நீ மேல்முறையீடு செய்திருக்கிறாய். அதனால் ரோம அரசனிடமே நீ போகலாம்” என்று சொன்னார்.
-