முதல் நூற்றாண்டு வீடு
முதல் நூற்றாண்டில், கட்டிடம் கட்டுவதற்குப் பல தொழில்நுட்பங்கள் இஸ்ரவேலில் பயன்படுத்தப்பட்டன. கட்டுகிறவரின் வசதிவாய்ப்புகளைப் பொறுத்தும், கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்களைப் பொறுத்தும் வித்தியாசமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. சின்னதாக இருந்த நிறைய வீடுகள், வெயிலில் காய வைக்கப்பட்ட களிமண் செங்கற்களால் அல்லது சீராக வெட்டப்படாத கற்களால் கட்டப்பட்டன. உட்சுவர்களுக்குப் பெரும்பாலும் சாந்து பூசப்பட்டது. பெரும்பாலான வீடுகளில், சமப்படுத்தப்பட்ட மண் தரைகள்தான் இருந்தன, ஆனால் சில வீடுகளின் தரைகளில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கூரை அமைப்பதற்காகத் தரையில் கம்பங்கள் நிறுத்தப்பட்டு, அவற்றின் மேல் மரச் சட்டங்கள் நேராகவும் குறுக்காகவும் பொருத்தப்பட்டன. அந்தச் சட்டங்கள்மேல் கிளைகளும் நாணற்தண்டுகளும் பரப்பி வைக்கப்பட்டன. பின்பு அதெல்லாம் களிமண்ணால் மூடப்பட்டு, கடைசியில் சாந்து பூசப்பட்டது. அதனால், அது ஓரளவுக்குத் தண்ணீர் ஒழுகாத கூரையாக இருந்தது. மொட்டைமாடிக்குப் போக மாடிப்படிகள் இருந்தன. ஏழைகளின் வீடுகளில் மாடிப்படிக்குப் பதிலாக வெளியே ஒரு ஏணி வைக்கப்பட்டிருந்தது; அவர்களுடைய வீடுகளில் நாற்காலி, மேஜை போன்ற சாமான்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
சம்பந்தப்பட்ட வசனம்: