நன்கொடை வழங்குவதில் சந்தோஷப்படுகிறீர்களா?
பிலிப்பியிலிருந்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள் உண்மை வணக்கத்திற்காக வாரி வழங்குபவர்களெனப் பெயரெடுத்திருந்தார்கள். கடவுளுடைய தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “உங்களை நினைக்கும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்; நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட நாள்முதல் இந்நாள்வரை அதை அறிவிக்கும் வேலைக்காக உங்களுடைய பங்கை அளித்திருக்கிறீர்கள். அதனால் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் நான் மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.” (பிலி. 1:3-5) லீதியாள் தன் வீட்டாருடன் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பவுலையும் அவருடைய தோழர்களையும் தன்னுடைய வீட்டில் வந்து தங்கும்படி கெஞ்சிக் கேட்டதை அவர் மறக்கவே இல்லை.—அப். 16:14, 15.
சீக்கிரத்திலேயே, பிலிப்பியில் உருவாகியிருந்த புதிய சபை பவுலுக்குத் தேவையானவற்றை இரண்டு முறை அனுப்பி வைத்தது; சுமார் 160 கிலோமீட்டர் (100 மைல்) தொலைவிலிருந்த தெசலோனிக்கே சபையில் பவுல் பல வாரங்கள் தங்கியிருந்த சமயத்தில் அவற்றை அனுப்பி வைத்தது. (பிலி. 4:15, 16) சில வருடங்களுக்குப் பிறகு, பிலிப்பியிலும் மக்கெதோனியாவிலும் இருந்த சகோதரர்கள் மிகுந்த கஷ்டத்திலும் ‘கொடிய வறுமையிலும்’ தவித்துக்கொண்டிருந்தார்கள்; அந்தச் சமயத்தில் எருசலேமில் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவதைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்களால் கொடுக்க முடிந்ததைவிட “அதிகமாகவே கொடுத்தார்கள்” என்று பவுல் எழுதினார். சொல்லப்போனால், ‘நிவாரணத் தொகை [அல்லது, நன்கொடை] வழங்கும் . . . பாக்கியத்தைத் தர வேண்டுமென அவர்களாகவே வந்து திரும்பத்திரும்ப எங்களைக் கெஞ்சிக் கேட்டார்கள்’ என்று எழுதினார்.—2 கொ. 8:1-4; ரோ. 15:26.
பிலிப்பியில் கிறிஸ்தவச் சபை உருவாகி சுமார் 10 வருடங்களுக்குப் பிறகும் அவர்கள் தாராள குணத்தைத் தொடர்ந்து காட்டினார்கள். ரோமாபுரியில் பவுல் சிறைப்பட்டிருந்ததை அவர்கள் கேள்விப்பட்டபோது எப்பாப்பிரோதீத்துவை அவரிடம் அனுப்பினார்கள்; இவர் தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் 1,287 கிலோமீட்டர் (800 மைல்) தூரம் பயணம் செய்து பவுலுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சென்றார். பவுல் சிறையில் இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து சகோதரர்களைப் பலப்படுத்துவதற்கும் ஊழியத்தைச் செய்வதற்கும் உதவவே பிலிப்பி சபையார் அவருக்குப் பொருள்களை அனுப்பி வைத்தார்கள்.—பிலி. 1:12-14; 2:25-30; 4:18.
இன்று பிரசங்கிக்கும் வேலைக்கும் சீடராக்கும் வேலைக்கும் ஆதரவு தருவதை உண்மைக் கிறிஸ்தவர்கள் பாக்கியமாகக் கருதுகிறார்கள். (மத். 28:19, 20) அதற்காகத் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் பணத்தையும் அளிக்கிறார்கள். கடவுள் கொடுத்திருக்கும் இந்த வேலைக்கு என்னென்ன வழிகளில் நீங்கள் ஆதரவு தரலாம் என்பதை இங்குள்ள பெட்டியில் பாருங்கள்.
[பக்கம் 22, 23-ன் பெட்டி]
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டுப் பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலை” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதைப் போடுகிறார்கள்.
இத்தொகையைச் சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். (கீழ்க்காணும் விதங்களிலும் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்திற்கு நன்கொடை அனுப்பி வைக்கலாம்.) காசோலைகளை “Watch Tower”a என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படுகிற அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அனுப்பி வைக்க வேண்டும்.
நிபந்தனையின் பேரில் நன்கொடை டிரஸ்ட் ஏற்பாடுb
உலகளாவிய வேலைக்காக டிரஸ்ட் ஏற்பாடு மூலம் Watch Tower என்ற பெயருக்குப் பணம் அளிக்கலாம். என்றாலும், கொடுப்பவரது கோரிக்கையின் பேரில் பணம் திரும்பக் கொடுக்கப்படும். கூடுதல் தகவலுக்காக, தயவுசெய்து உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
திட்டமிட்ட நன்கொடைc
நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரத்தில் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.
வங்கிக் கணக்குகள்: வங்கிக் கணக்குகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலம் அல்லது தன் மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்குக் கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பத்திரங்களும்: பங்குகளையும் பத்திரங்களையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது சட்டப்பூர்வமான உயிலில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்; அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம்வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்குக் கைமாறாகப் பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டு.
உயில்களும் டிரஸ்ட்டுகளும்: சொத்து அல்லது பணத்தைச் சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்குச் சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியைd அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்ட்டுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இதுபோன்ற திட்டமிட்ட நன்கொடை மூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.e பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடையாகக் கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்கக் கொடுப்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக இச்சிற்றேடு தயாரிக்கப்பட்டது. அநேகர் இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பிறகு உலகமுழுவதும் நடக்கும் நமது மத வேலைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் உதவியிருக்கிறார்கள்; அதேசமயம், தாங்களும் அதிக வரிவிலக்கைப் பெற்றிருக்கிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தியாவில், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயரில் எடுக்க வேண்டும்
b இந்தியாவுக்குப் பொருந்தாது
c குறிப்பு: வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எனவே, வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் திட்டங்களையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ தொடர்புகொள்ளுங்கள். அதோடு, முடிவாக எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்குமுன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளுங்கள்.
d இந்தியாவில், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயரில் எடுக்க வேண்டும்
e இந்தியாவில் கிடைப்பதில்லை
[பக்கம் 23-ன் படம்]
Jehovah’s Witnesses of India,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 28468072