இதோ சில அணுகுமுறைகள்
நினைவுநாள் அழைப்பிதழ்
“ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்க வந்திருக்கிறோம். அது இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு நாள் அனுசரிப்பு. இந்த நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் தொடர்ந்து பேசுங்கள்.] இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சி ஏப்ரல் 14-ஆம் தேதி நடக்கப்போகிறது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் அதற்குக் கூடிவருவார்கள். இயேசுவின் மரணத்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அன்று ஒரு பேச்சு கொடுக்கப்படும். நிகழ்ச்சி நடக்கிற நேரமும் இடமும் இந்த அழைப்பிதழில் இருக்கிறது.”
காவற்கோபுரம் ஏப்ரல் – ஜூன்
“நாம் நேசிக்கிற யாராவது இறந்துபோனால் அப்படியே துடித்துப்போகிறோம். அந்த வேதனையிலிருந்து மீண்டு வருவது ரொம்பக் கஷ்டம், இல்லையா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] நிறைய பேருக்கு ஆறுதலாக இருந்த ஒரு விஷயத்தை உங்களுக்கு வாசித்துக் காட்டலாமா? [வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால் ஏசாயா 25:8-ஐ வாசியுங்கள்.] கடவுள் மரணத்தை ஒழிப்பார், நாம் நேசிக்கிறவர்களைத் திரும்ப உயிரோடு எழுப்புவார் என்று பைபிள் சொல்கிறது. அந்த அருமையான வாக்குறுதிகளைப்பற்றி இந்தப் பத்திரிகையில் படிக்கலாம்.”