இதோ சில அணுகுமுறைகள்
அக்டோபர் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க...
“நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சமயத்தில் கடவுளிடம் ஜெபம் செய்கிறோம். நாம் செய்யும் ஜெபங்களைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்? அதை அவர் ஆர்வமாகக் கேட்கிறாரா இல்லை ஏதோ கடமைக்கென்று கேட்கிறாரா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். “இதைப் பற்றி உங்களுக்கு ஒரு கட்டுரையைக் காட்டலாமா?” வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால் அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரத்தின் கடைசி பக்கத்திலுள்ள கட்டுரையைக் காட்டுங்கள். அதிலுள்ள முதல் கேள்வியைக் கலந்துபேசுங்கள். குறைந்தது ஒரு வசனத்தையாவது வாசித்துவிட்டு, பத்திரிகைகளைக் கொடுங்கள். அடுத்தமுறை வரும்போது இரண்டாவது கேள்வியைப் பற்றி சிந்திக்கலாம் என்று சொல்லுங்கள்.
காவற்கோபுரம் அக்டோபர் – டிசம்பர்
“நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று நிறையப் பேர் யோசிக்கிறார்கள். உலகத்தில் நடக்கும் எல்லா கெட்ட காரியங்களுக்கும் யார் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இந்தக் கஷ்டங்களுக்கு எல்லாம் கடவுள் காரணமா என்பதைப் பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்று உங்களுக்குக் காட்டலாமா? [வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் யாக்கோபு 1:13-ஐ வாசியுங்கள்.] ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன, அதை முடிவுகட்ட கடவுள் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பற்றி இந்தப் பத்திரிகையில் இருக்கிறது.”