உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp25 எண் 1 பக். 9
  • போர்கள் தொடர்கதையாவது ஏன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போர்கள் தொடர்கதையாவது ஏன்?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பாவம்
  • மனித அரசாங்கம்
  • சாத்தானும் அவனுடைய கெட்ட தேவதூதர்களும்
  • போர் வேரோடு அழிக்கப்படும்​—எப்படி?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
  • கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • போரின் பின்விளைவுகள்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
  • மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2025
wp25 எண் 1 பக். 9

போர்கள் தொடர்கதையாவது ஏன்?

போர்கள் ஏன் நடக்கின்றன என்பதையும் அவை ஏன் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்பதை பற்றியும் பைபிள் சொல்கிறது.

பாவம்

நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். (ஆதியாகமம் 1:27) அதனால் கடவுளுடைய குணங்களான சமாதானம், அன்பு போன்றவற்றை அவர்களால் இயல்பாகவே காட்ட முடியும். (1 கொரிந்தியர் 14:33; 1 யோவான் 4:8) இருந்தாலும், ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை, அவர்கள் பாவம் செய்தார்கள். அவர்களிடமிருந்துதான் பாவமும் மரணமும் நம் எல்லாருக்கும் வந்தது. (ரோமர் 5:12) பாவம் செய்கிற இயல்பு மனிதர்களுக்கு இருப்பதால்தான் அவர்கள் கெட்ட விஷயங்களை யோசிக்கிறார்கள், கொடூரமாகவும் நடக்கிறார்கள்.—ஆதியாகமம் 6:5; மாற்கு 7:21, 22.

மனித அரசாங்கம்

தங்களை தாங்களே ஆட்சி செய்கிற விதத்தில் கடவுள் மனிதர்களை படைக்கவில்லை. பைபிள் இப்படி சொல்கிறது: “மனுஷனுக்குத். . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.” (எரேமியா 10:23) அதனால்தான் மனித அரசாங்கத்தால் போருக்கும் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

சாத்தானும் அவனுடைய கெட்ட தேவதூதர்களும்

“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) இந்த ‘பொல்லாதவன்’ பிசாசாகிய சாத்தான் என்று அழைக்கப்படுகிறான். இவன் ஈவிரக்கமற்ற கொலைகாரன். (யோவான் 8:44) சாத்தானும் அவனுடன் சேர்ந்துகொண்ட பொல்லாத தேவதூதர்களும், போரை ஆரம்பிப்பதற்கும் பொல்லாத காரியங்களை செய்வதற்கும் மனிதர்களை மறைமுகமாகத் தூண்டுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 12:9, 12.

போருக்கும் வன்முறைக்கும் ஆணிவேராக இருக்கும் விஷயங்களை மனிதர்களால் முற்றிலுமாக எடுத்துப்போட முடியாது, ஆனால் கடவுளால் நிச்சயம் முடியும்!

மதமும் போரும்

நிறைய மதங்கள் போரை ஏற்றுக்கொள்கின்றன, அதை நியாயப்படுத்துகின்றன, அவற்றை ஆதரிக்கவும் செய்கின்றன. இப்படிப்பட்ட பொய் மதங்களை பைபிள் “மகா பாபிலோன்” என்று அழைக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:2) “பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய” உயிருக்கும் இந்த மகா பாபிலோன்தான் பொறுப்பு என்று கடவுள் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 18:24) இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள jw.org-ல் இருக்கும் “மகா பாபிலோன் என்றால் என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்